திருவலம்: திருவலம் அருகே, மாட்டின் மீது பைக் மோதி கால்நடை டாக்டர் பலியானார்.
வேலுார் மாவட்டம், திருவலம் அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சதிஷ், 32. இவர் 55 புத்துார் கிராமத்தில் அரசு கால்நடை டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 17 ம் தேதி காலை 10:00 மணிக்கு கரிகிரிக்கு யமகா பைக்கில் சென்றார். அப்போது சாலையில் சுற்றிக் கொண்டிருந்த மாடு ஒன்று திடிரென பைக்கின் குறுக்கே வந்தது. இதனால் மாட்டின் மீது பைக் மோதி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6:00 மணிக்கு அவர் இறந்தார். திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement