தட்சிண கன்னடா:தட்சிண கன்னடா மாநில எல்லையிலிருந்து ஐந்து கி.மீட்டரில், மாவட்ட நிர்வாகம், மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதனால் விற்பனையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் எல்லைகளில் தடையின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தில்லை.
இது தொடர்பாக தட்சிணகன்னடா மாவட்ட மது வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:மது வியாபாரிகள் உரிமக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி, தங்கள் வணிகத்தை சட்டப் பூர்வமாக நடத்துகின்றனர். கொரோனாவால், பல உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட உத்தரவுக்கு பின், மாநில எல்லைகளில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. முறைகேடாக இரண்டு மடங்கு விலைக்கு பலரும் மதுபானம் வாங்குகின்றனர். இந்த முறைகேட்டை தடுப்பதில் அதிகாரிகளும் அலட்சியம் காட்டுகின்றனர். சில தங்கும் விடுதிகளில், மது விற்பனை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அருகிலுள்ள மாநிலங்களுக்கு விடுதிகள் மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். முறையாக உரிமம் பெற்று மதுக்கடை நடத்துவோர், வரி செலுத்துவதற்கும் முடியாமல் உள்ளனர்.முறைகேடான மதுவிற்பனையை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE