சூலுார்:கூட்டுறவு சங்கத்தில் பிடித்தம் செய்த, பங்கு தொகை மற்றும் சேமிப்பு தொகையை, பல ஆண்டுகளாகியும் திருப்பி வழங்காததால், நெசவாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஒண்டிப்புதுாரில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கே 894) செயல்பட்டு வந்தது. சங்கத்தில், 100 மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். நெசவாளர்களிடம் பங்குத் தொகை மற்றும் சேமிப்பு தொகையை, சங்கம் பிடித்தம் செய்து வந்தது. உறுப்பினர்கள் காட்டன் மற்றும் பட்டு சேலைகள் நெய்து, சங்கத்துக்கு கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் நல்ல முறையில் இயங்கி வந்த கூட்டுறவு சங்கம், 2011ல் இருந்து முடங்கியது.இதனால், நெசவாளர்கள் வேதனையடைந்தனர். தங்களுக்கு சேர வேண்டிய பங்கு மற்றும் சேமிப்பு தொகையை திரும்ப கேட்டு வந்தனர். 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை பிடித்தம் செய்த தொகையை தராமல், சங்கத்தினர் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், நெசவாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.பாதிக்கப்பட்ட, நாகராஜ், லட்சுமி உட்பட ஐந்து நெசவாளர்கள், கோவை மாவட்ட கைத்தறி மற்றும் துணி நுால் துறை உதவி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'தங்களுக்கு சேர வேண்டிய பங்கு மற்றும் சேமிப்பு தொகையை உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE