சென்னை: அதிமுக.,விலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் செப்.,14ல் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
களங்கம்
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஜூன் 14ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை, கட்சியின்ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் வெளியிட்டனர். அவர்கள் விடுத்த அறிக்கை, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் மீது, அவதுாறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கோரி, சென்னையில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், நீதிமன்றத்தில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இருவரின் கோரிக்கையையும் ஏற்க மறுத்ததுடன், செப்.,14ல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE