திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்யாததால் கிராமங்களில் விவசாயப் பணிகள் துவங்காத நிலை உள்ளது.
திருப்புத்துாரில் கடந்த 20 நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. பரவலாக பெய்யாமல் ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்கிறது. மழை இன்றி, கண்மாய்களில் போதிய நீர் இல்லாததால் விவசாயப் பணிகள் துவங்கவில்லை. உழுவதற்கே தண்ணீர் போதாத நிலை காணப்படுகிறது.இளையாத்தங்குடி பகுதியில் மானாவாரி கடலை,உளுந்து பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்கிறது.
தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் கருகி விடும்.இந்நிலையில் மான்ய விலையில் வேளாண்துறையினர் விதை விற்பனையை துவக்கியுள்ளனர். விதைப்பு பணியை துவக்க மழைக்காக காத்திருக்கின்றனர்.வேளாண்துறையினர் கூறுகையில், வழக்கமாக இப்பகுதியில் செப்.,ல் தான் விதைக்கின்றனர். அக்.ல் நாற்று நடவும், ஜன.,ல் அறுவடை செய்வதும் வழக்கம். தற்போது மழை கிராமங்களில் இல்லை. வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாக பெய்துள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE