புதுடில்லி: ஆப்கானிலிருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டில்லயில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிபின் ராவத்பங்றே்றார். அப்போது அவர் பேசியது, ஆப்கானை தலிபான்கள் கைப்பற்ற இரு மாதங்கள் ஆகும் என நினைத்தாம் ஆனால் இவ்வளவு விரைவாக கைப்பற்றுவர் என எதிபார்க்கவில்லை.
ஆப்கானில் ஊடுருவியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கவலை மத்திய அரசுக்குஉள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை போல ஆப்கனில் இருந்து வரும் சவால்களையும் சமாளிக்க தயாராக உள்ளோம்.
பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது தொடர்பான உளவு தகவல்களை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் நாடுகள் பரிமாறிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE