சிவகங்கை :மானாமதுரையில் 53 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய ரெய்டில் கெட்டுப்போன 42 கிலோ ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், பேரூராட்சி துாய்மை ஆய்வாளர் தங்கத்துரை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தியாகராஜன், வேல்முருகன், ராஜேஷ்குமார், செந்தில் உள்ளிட்டோர் மானாமதுரையில் பார்த்திபனுார் ரோடு, கொடிக்கால் தெரு, ஆர்.சி., தெரு, சோனையா கோவில் தெரு, சுந்தரபுரம் பகுதியில் உள்ள 53 கடைகளில் ரெய்டு நடத்தினர்.ரெய்டில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பாலிதீன் பைகள், 12 லிட்டர் காலாவதி குளிர்பானம், கெட்டுப்போன 42 கிலோ ஆட்டு இறைச்சி, காலாவதி உணவு பொருட்கள் 12 கிலோ உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 2 கடைகளுக்கு விளக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர். 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE