கொடுங்கையூர் : கொடுங்கையூரில், மொபைல் போன் டவரில் ஏறி, ரவுடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடுங்கையூர், சேலைவாயலைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29, பிரபல ரவுடி. இவருக்கு நான்சி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் மீது, கொலை உட்பட ஏழு வழக்குகள் உள்ளன.தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில், போலீசார் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக, குடும்பத்தாரிடம் புலம்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று, கொடுங்கையூர் - தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள 40 அடி உயர மொபைல் போன் டவர் மீது ஏறிய மணிகண்டன் தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், சமாதானம் பேசி அவரை கீழே இறங்க வைத்தனர். அவரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement