புதுச்சேரி : 'புதுச்சேரியில் ஐகோர்ட் கிளை ஏற்படுத்த வேண்டும்' என சட்டக் கல்லுாரி பொன் விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினர்
.புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக் கல்லுாரி பொன் விழாவில் பங்கேற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசுகையில், 'இறையாண்மை கொண்ட அரசு, சமூகத்தில் நீதி கிடைத்திட வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டார்.சபாநாயகர் செல்வம் பேசும்போது, 'சட்டம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பே. சட்டத்தினால் நாடும், வீடும் பாதுகாப்பாக உள்ளது. அண்மையில் தேவையற்ற சட்டங்களை மத்திய அரசு நீக்கி உள்ளது.
மக்களுக்கான நீதி வழங்கும் முறை இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். சென்னை ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஐகோர்ட்டில் பணியாற்றும் வாய்ப்பினை புதுச்சேரி வழக்கறிஞர்கள் பெறுவர்' என்றார்.அமைச்சர் லட்சுமிநாராயணன், 'பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி ஐகோர்ட் கிளை இருந்துள்ளது. எனவே புதுச்சேரியில் ஐகோர்ட் கிளையை நிறுவ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் புதுச்சேரிக்கு இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்க வேண்டும்' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement