பெங்களூரு : ஹொஸ்பேட் நகர் வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவங்கும்படி, முதல்வர் பசவராஜ் பொம்மை மூலம், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் அமைச்சர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:ஹொஸ்பேட் நகர், மாலுார் தொழிற் பகுதி, நந்தகுடி தொழிற்பகுதி, கோலார் தொழிற்பகுதிகளில் நுழைவாசல். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் மாற்று சாலை, ஹொஸ்பேட் நகர் மூலமாக கடந்து செல்கிறது.ஹொஸ்பேட்டின் வாழ்க்கை தரம், பெங்களூரை விட, குறைவாக இருப்பதால், பெங்களூரின் ஊழியர்கள், பெங்களூரு புறநகர், ஹொஸ்கேட் நகரில் பெருமளவில் வசிக்கின்றனர்.
அவர்கள் பெங்களூருக்கு செல்ல, மெட்ரோ ரயில் போக்குவரத்து ஏற்படுத்தினால், சாலை நெருக்கடி குறையும். எனவே மெட்ரோ ரயில் போக்குவரத்தை விஸ்தரிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE