அன்னுார் : 'வங்கியை விட, எல்.ஐ.சி., கூடுதல் வட்டி வழங்குகிறது' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., 1956 செப்டம்பர் 1ம் தேதி, துவக்கப்பட்டது.
65 ஆண்டுகள் நிறைவு பெற்று, 66ம் ஆண்டு துவங்குவதை முன்னிட்டு, நேற்று அன்னுார் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் விழாநடந்தது.கிளை மேலாளர் மீனாட்சி குத்துவிளக்கேற்றி பேசுகையில், "கடந்த நிதி ஆண்டில், எல்.ஐ.சி., புதிதாக, 2 கோடியே 10 லட்சம் பாலிசிகள் விற்றுள்ளது. 2 கோடியே 28 லட்சம் முதிர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது.கடந்த நிதியாண்டில் 56 ஆயிரத்து 255 கோடி ரூபாய் புதிய பிரீமியம் வசூலித்துள்ளது.
உலக அளவில் எல்.ஐ.சி., நிறுவனம் மூன்றாம் இடம் வகிக்கிறது. தற்போது வங்கிகளை விட எல்.ஐ.சி., கூடுதல் வட்டி வழங்குகிறது. எல்.ஐ.சி.,யில் செலுத்தும் முதலீடுகளுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு உள்ளது" என்றார்.நிகழ்ச்சியில், நிர்வாக அலுவலர் ஜெயா, வளர்ச்சி அதிகாரி மணிகண்டன், முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE