சென்னை : ராஜ்யசபா இடைத் தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு மட்டும் ஏற்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன.
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., முகமத்ஜான் மறைவு காரணமாக, அவர் வகித்த பதவிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல், கடந்த மாதம், 24ம் தேதி துவங்கி, 31ல் நிறைவடைந்தது. தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்தனர்.வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. தி.மு.க., வேட்பாளர் மனு மட்டும் ஏற்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற, நாளை கடைசி நாள். நாளை மாலை, 3:00 மணிக்கு மேல், தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE