விருதுநகர் : விருதுநகர் அருங்காட்சியகத்தில் மாயாஜால கூஜா ஒன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஓர் அரிய பொருளை காட்சியில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மானாமதுரை மண்பாண்ட உற்பத்தியாளர் ரமேஷ் வழங்கிய மாயாஜால கூஜா காட்சி பொருளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள்: இக்கூஜா களிமண்ணால் செய்யப்பட்டு தீயில் சுட்டு எடுக்கப்பட்டது.
இதன் மேல்புறம் தண்ணீர் ஊற்ற முடியாது. அடிப்பாகத்தில் உள்ள துாவாரத்தில் வழியே நீரை ஊற்றி விட்டு கூஜாவை நிமிர்த்தி விட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேறுவதில்லை. கூஜாவின் கெண்டிப்பகுதியல் மட்டுமே தண்ணீர் வரும். நுண்ணிய வேலைப்பாடுடன் அமைந்துள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE