கிருஷ்ணகிரி: சென்னை ஆடிட்டர் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த இருவர், நேற்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான், 48; கடந்த, 27ல், கிருஷ்ணகிரி வந்தவர் மாயமானார். அவரது மனைவி பூர்ணிமா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை ஒரு கும்பல் கடத்தி கொன்று, சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்தது தெரிந்தது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார், பெரம்பலூர் சபரீஷ், சாமல்பட்டி வி.சி., கட்சி பிரமுகர் ஜிம்மோகன் உள்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். பண விவகாரத்தில் இக்கொலை நடந்தது தெரிந்தது. கொலையான ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான், 30 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக, சபரீசிடம் கூறியதாகவும், அதற்காக, 3.50 கோடி ரூபாய் கமிஷன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தொகையை சபரீசன், ஜனரஞ்சன் பிரதானிடம் கொடுத்த நிலையில், லோன் தொகையை கொடுக்காததால் அவரை கொன்றது தெரிந்தது. இது தொடர்பாக, ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனியப்பன், 39, விஜி, 29, ஆகியோரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் நேற்று கிருஷ்ணகிரி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு செந்தில்பிரபு முன்னிலையில் சரணடைந்தனர். இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE