திருப்பூர்:ஊரடங்கு விதிமுறைகளால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்களில், பக்தர் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சனிப்பிரதோஷமான நேற்று மாலை, பக்தர்களின்றி பூஜைகள் நடந்தன. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நந்திக்கு பால், இளநீர், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 27 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அலங்கார பூஜையும், பின் மூலவரான அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளில் சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில்களில், சனிப்பிரதோஷ பூஜைகள் நடந்தன. மூலவர், நந்தியம்பெருமான், உமாமகேஸ்வரருக்கு, அபிேஷக பூஜைகள் நடந்தது.தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், பிரதோஷ நேரத்தில், பக்தர்கள் நடைவாசல் முன் தீபம் ஏற்றி வழிபட்டனர்.ராஜகோபுர நடைவாசல் நிலைப்படியில், வில்வம் மற்றும் மலர்களை வைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர். சிலர், பிரதோஷ காலத்தில், கோவில் வாசலில் அமர்ந்து, சிவபுராணம் பாடியபடி இறைவனை பிரார்த்தனை செய்தனர்.