புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே இளம்பெண்ணை, கடத்திச் சென்ற கட்டட தொழிலாளியை 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் கடலுார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்துரு,22. கட்டட தொழிலாளி. இவரும் பிளஸ் 2 முடித்த 17 வயது பெண்ணும் ஓராண்டாக காதலித்தனர்.இது பெண் வீட்டிற்கு தெரிந்ததால், புதுச்சத்திரம் அடுத்த கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்க வைத்தனர். கடந்த ஜூன் 29ல், பாட்டி 100 நாள் வேலைக்கு சென்றார். அப்போது, இளம்பெண்ணை, சந்துரு கடத்திச் சென்றார்.
பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த சந்துருவை, 'போக்சோ' சட்டத்தில் இன்ஸ்பெக்டர் வினதா கைது செய்தார். கடலுார் மகளிர் காப்பகத்தில் பெண் அனுப்பிவைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE