கரூர்: கரூர் நகராட்சியை மாநகராட்சியாகவும், புகளூர், பள்ளப்பட்டி பேரூராட்சிகளை நகராட்சியாகவும் தரம் உயர்த்துதல் குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளுக்கு விளக்க கூட்டம் நடந்தது. பின்னர், கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் நகராட்சி அருகில் உள்ள சில கிராம பஞ்., மற்றும் ஒரு பேரூராட்சி இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகளூருடன் புஞ்சை புகளூர் மற்றும் மூன்று கிராம பஞ்., இணைத்து புகளூர் நகராட்சியாகவும், பள்ளப்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள கிராம பஞ்., இணைக்கப்பட்டு பள்ளப்பட்டி நகராட்சியாகவும் முன்மொழிவது குறித்த பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் தெரிவித்தனர். அவர்களுக்கு தகுந்த விளக்கங்கள் அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. பஞ்., பகுதிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைக்கப் பட்டாலும் இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். டி.ஆர்.ஓ., லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE