ஐதராபாத்-கொரோனா வைரசுக்கான 'டோசிலிஜுமாப்' மருந்தை நம் நாட்டில் தயாரித்து வினியோகிக்க, 'ஹெட்டேரோ' நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் ரோச் ஹோல்டிங் டி.ஜி., என்ற நிறுவனம், டோசிலிஜுமாப் என்ற மருந்தை தயாரித்துள்ளது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் தரும் என கூறப்படுகிறது.கொரோனாவில் இருந்து விரைந்து குணமடைய இந்த மருந்து உதவும் என்றும், 'வென்டிலேட்டர்' தேவையை குறைக்க வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த மருந்தை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்க, ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஹெட்டேரோ நிறுவனத்திற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது.'இங்கு 'டோசிரோ' என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள இந்த டோசிலிஜுமாப் மருந்து இம்மாத இறுதிக்குள் நமக்கு கிடைத்துவிடும்' என, ஹெட்டேரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE