பெங்களூரு-இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான் - 2' செயற்கைக் கோள், நிலவின் சுற்று வட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 செயற்கைக் கோள், இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி, பெங்களுரில் இஸ்ரோவின் இரு நாள் பயிலரங்கம் நேற்று துவங்கியது.

இதில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:இரு ஆண்டுகளில் சந்திரயான் - 2 செயற்கைக் கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளது. இதில், எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி வருகின்றன.நிலவில் நீர், கனிமம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய தகவல்களை சந்திரயான் - 2 செயற்கைக் கோள் அனுப்பியுள்ளது. அவை பிரமிக்க வைப்பதாக உள்ளன.இந்த அறிவியல் தகவல்கள் இஸ்ரோ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வி மையங்கள் ஆய்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE