சிதம்பரம் : தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான ரூ. 150 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் முன்னாள் எம்.பி., அப்துல் ரகுமான் கூறினார்.கடலுார் மாவட்டம் சிதம்பரத்திற்கு வந்த அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஸ்டாலின் முன்மாதிரியான முதல்வராக செயல்படுகிறார். தமிழகம் முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துகள் விவரம் தயார் செய்யப்படுகிறது. தமிழகம் முழுதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான ரூ. 150 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மேலும் வக்பு வாரியம் சார்பில் பெண்கள் கல்லுாரி, பள்ளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை வாரியம் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முறையாக பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE