கடலுார் : மந்தாரக்குப்பத்தில் வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கடலுார் கோர்ட்டில் சரணடைந்தார்
கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் அருண் (எ) அருள்குமார், 35; இவர், கடந்த 1ம் தேதி நெய்வேலி என்.எல்.சி., 2வது சுரங்கம் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த தேவா, 25; என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதில், அருண், ஹரிகிருஷ்ணன், தேவா மற்றும் சில நண்பர்கள் கடந்த 25ம் தேதி மது அருந்தினர்.அன்றிரவு ஹரிகிருஷ்ணன் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹரிகிருஷ்ணன் சாவுக்கு அருண் தான் காரணம் என தேவா நினைத்து அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தேவாவை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் போலீசார் தேடுவதையறிந்த மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 3ல் நேற்று சரணடைந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE