காரியாபட்டி : ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்று வறியவர்களை கண்டறிந்து கோதானம் வழங்கி வருகிறது காரியாபட்டி இன்பம் பவுண்டேஷன்.
காரியாபட்டி பகுதி மாற்றுத்திறனாளிகள், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வறியவர்களை கண்டறிந்து பல்வேறு உதவிகளை காரியாபட்டி இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழரசிபோஸ் செய்து வருகின்றனர். அத்துடன் தினமும் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மதியம் அன்னதானம் செய்து வருகின்றனர்.கொரோனா காலத்தில் வறுமையில் வாடிய பலருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை வழங்கினர்.
தொடர்ந்து வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வாழ்வாதாரம் இன்றி தவிப்பவர்களை கண்டறிந்து கடந்த ஓராண்டாக கோதானம், வஸ்திர தானம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று காரியாபட்டி முடுக்கன்குளத்தை சேர்ந்த அழகு, கோபாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த குமாருக்கு காரியாபட்டி முருகன் கோயிலில் ஆவணி அமாவாசை தினத்தை முன்னிட்டு கோ தானம், வஸ்திர தானம் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE