மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., வீடருகே வெடிகுண்டு வீச்சு
மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., வீடருகே வெடிகுண்டு வீச்சு

மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., வீடருகே வெடிகுண்டு வீச்சு

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங் வீடருகே மர்ம நபர்கள் 3 பேர் , 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.மே.வங்க மாநிலம் பாரக்பூர் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் அர்ஜூன் சிங். திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக
மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., வீடருகே வெடிகுண்டு வீச்சு

கோல்கட்டா: மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங் வீடருகே மர்ம நபர்கள் 3 பேர் , 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.



மே.வங்க மாநிலம் பாரக்பூர் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் அர்ஜூன் சிங். திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், கடந்த 2019ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வில் சேர்ந்தார். தொடர்ந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வீடு கோல்கட்டாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஜகதால் பகுதியில் உள்ளது. இன்று(செப்.,8) காலை 6:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், அர்ஜூன் சிங் வீடருகே 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கதவுகள் லேசாக சேதம் அடைந்தன.



latest tamil news

அர்ஜூன் சிங், தற்போது டில்லியில் உள்ளார். வெடிகுண்டு வீச்சு தொடர்பாக தெரிந்தவுடன் உடனடியாக சொந்த ஊர் திரும்புகிறார்.



இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார், மே.வங்கத்தில் வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. எம்.பி., அர்ஜூன் சிங் வீடருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அவரது பாதுகாப்புக்கு முதல்வர் மம்தா தடை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.





இந்த சம்பவத்திற்கு திரிணமுல் காங்கிரஸ் தான் என பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார். இதனை மறுத்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், பா.ஜ.,வில் நடக்கும் உட்கட்சி மோதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (13)

DVRR - Kolkata,இந்தியா
08-செப்-202117:06:18 IST Report Abuse
DVRR ஒர்ஸ்ட் பெங்கால் வேஸ்ட் பெங்கால் என்று அதன் பெயர் மாற்றப்பட்டு விட்டது முஸ்லீம் மும்தாஜ் ஆட்சிக்கு வந்தவுடன்
Rate this:
Cancel
08-செப்-202116:42:18 IST Report Abuse
தமிழ்கிறுக்கன் தேர்தல்ல ஜெயிச்ச வொடனே மம்தா ஆளுக செஞ்ச அராஜகம் நாடறியும். இவனுங்களுக்கு வக்காலத்து வாங்க சில தலிபான் கும்பல் இங்கே.
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
09-செப்-202116:49:07 IST Report Abuse
E. RAJAVELUதலிபான் கண்டு அமெரிக்காவே ஆடிப்போச்சு நீயெல்லாம் ஜுஜுபி........
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
08-செப்-202116:31:13 IST Report Abuse
E. RAJAVELU திரிணாமுல், சிவசேனா தொண்டர்களிடம் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X