பள்ளிப்பட்டு : ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பேரூராட்சியில், பெயர் பலகைகளில் எழுத்துகள் அழிந்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பள்ளிப்பட்டு பேரூராட்சி. பள்ளிப்பட்டு நகரை ஒட்டி, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களின் அத்தியாவசிய பணிகளுக்காக, பள்ளிப்பட்டு வந்து செல்கின்றனர்.ஆந்திர அரசு பஸ்களும், பள்ளிப்பட்டுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பட்டு நகரில், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து வருபவர்களும் படித்து, புரிந்து கொள்கின்றனர்.இந்நிலையில், சில ஆண்டுகளாக இந்த பெயர் பலகைகளை புதுப்பிக்காததால், அதில் உள்ள எழுத்துகள் அழிந்து சேதமடைந்துள்ளன.இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெயர் பலகையை புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE