பல்லாவரம்:பல்லாவரத்தில், சீட்டு பணம் தராததால், குழந்தைகளை சிறைபிடித்து, தாயை மிரட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.
ஜமீன் பல்லாவரம், சஞ்சய் காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 40; சீட்டு நடத்தி வருகிறார். திருநெல்வேலியை சேர்ந்த கார் ஓட்டுனர் கணேசன், 30, என்பவருக்கு, ராஜேஸ்வரி, 1 லட்சம் ரூபாய் சீட்டு பணம் தர வேண்டியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, போதையில் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்ற கணேசன், கதவை தாழிட்டார். பின், அங்கிருந்த சிறிய கத்தியை எடுத்து, ராஜேஸ்வரின், 15 வயது மகள் மற்றும் 8 வயது மகனை பிடித்து வைத்துக்கொண்டார்.
குழந்தைகளை கத்தியால் தாக்கி, சீட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து, கணேசனை கைது செய்தனர். குழந்தைகளை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE