காரைக்குடி : ''இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில் மையத்தை சீரமைத்து தருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்க வேண்டும்.கொரோனா காலத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பு இல்லை என மத்திய அரசு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் சில நாட்கள் மட்டுமே பற்றாக்குறை தெரிந்தது. வடமாநிலங்களில் அதிகளவில் பற்றாக்குறை இருந்தது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்திய பொருளாதாரமும் பாதிக்கும்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., -- காங்., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி மாறினால் தான் பெட்ரோல், டீசல் விலை குறையும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையால் அச்சுறுத்தல் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE