சென்னை : 'தமிழகத்தில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஓரிரு இடங்களில், இன்று மழை பெய்யும். மேலும், இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.செப்.,14ல், நீலகிரி, கோவை, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பொய்யும். தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 48 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மத்திய வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE