அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றியபோது பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களிடம் பேசினார். கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரம் மற்றும் மொத்த கொள்முதல் உற்பத்தி கடுமையாக சரிந்து இருந்தது.
![]()
|
இதுகுறித்து பேசிய அவர், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்தார். உலகின் வல்லரசு நாடுகள் பல கொரோனா தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் வேளையில் இந்தியா பொருளாதார சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ஒருபுறம் வைரஸ் தாக்கத்தை சமாளித்து வந்த அதே வேளையில் இந்தியா பொருளாதாரத்திலும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிவேகமாக முன்னுக்கு வந்தது.
குறிப்பாக ஆடைகளை உற்பத்தி செய்யும் குஜராத்தின் சூரத் தொழிற்சாலைகள் இந்த ஆண்டு வணிகத்தில் சிறந்து விளங்குவதாகத் தெரிவித்துள்ளார். ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் வளர்ச்சி கண்டுள்ளதை அடுத்து தற்போது தேசிய புள்ளியியல் அலுவலகம் அளித்த தகவலின்படி இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் இந்திய பொருளாதாரம் 20.1 சதவீதம் முன்னேற்றம் கண்டு இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
![]()
|
கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரித்து வந்தபோதிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த கொள்முதல் உற்பத்தி 24.4 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
21ம் நூற்றாண்டில் தலைசிறந்த பொருளாதார வளர்ச்சிகண்ட நாடாக திகழும் இந்தியாவில் தொழில் வாய்ப்புகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement