கடலுார் : கடலுார் கோர்ட்டில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமை தாங்கினார்.
கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி புவனேஸ்வரி, தொழிலாளர் நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, 'போக்சோ' நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், எஸ்.சி.,எஸ்.டி., நீதிமன்ற மாவட்ட நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், சிறப்பு சார்பு நீதிபதி இருதயராணி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் வரவேற்றார். வக்கீல் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சம்பத்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் சிவராஜ், செயலாளர் வனராசு பங்கேற்றனர்.
இதேப் போன்று பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து, சமரசம் செய்யக் கூடிய குற்றவியல் வழக்குகள், பணம் மோசடி, நிலம் எடுப்பு, குடும்ப நல வழக்குகள், சிவில் வழக்குகள் என மொத்தம் 4,688 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில், 2,704 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ. 14 கோடியே 69 லட்சத்து 94 ஆயிரத்து 580 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE