ஆத்தூர்: முன்னாள் முதல்வர் பழனிசாமி பெயருடன் உள்ள கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது குறித்து, ஆத்தூர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சியினர் ஆய்வு செய்தனர்.
ஆத்தூர் அருகே, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே, 4.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை, 2017ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அதற்காக வைக்கப்பட்ட கல்வெட்டில், முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் பெயருடன் இருந்த கல்வெட்டு பெயின்ட் ஊற்றி மறைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நேற்று, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கட்சியினர் பாலத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பெயர் உள்ள கல்வெட்டு மறைத்துள்ளது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், ஆத்தூர் டி.எஸ்.பி., மற்றும் ஆத்தூர் ஊரக போலீசில், கல்வெட்டு மறைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புகார் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE