புதுச்சேரி : வம்பாகீரப்பாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரனை, சந்தித்து பேசினார்.அப்போது, வம்பாகீரப்பாளையத்தில் சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன. இதனால் சாலை விபத்துகளும் நடந்து வருகின்றன. வம்பாகீரப்பாளையம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடிநீர் தேடி கோலாஸ் நகர் வரை அலைகின்றனர். அப்பகுதி மக்களும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். எனவே, வம்பாகீரப்பாளையத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE