திருபுவனை : திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி, சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி நிர்வாகி டாக்டர் சம்பத்- சுசீலா தம்பதியின் மூத்த மகன் ஹரீஸ்குமார்- நோவாஅன் ஜேகப் ஆகியோரின் திருமண விழா, மயிலம் காசியம்மாள் திருமண மஹாலில் நடந்தது.
திருமண வரவேற்பு விழா, புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மணமக்களை நேரில் வாழ்த்தினார்.அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், ரமேஷ், முன்னாள் அமைச்சர் தியாகராஜன், முன்னாள் சபாநாயகர்கள் சபாபதி, சிவக்கொழுந்து ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், கல்வித் துறை, காவல்துறை அதிகாரிகள், புதுச்சேரி தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவிற்கு வந்தவர்களை பள்ளி நிர்வாகி சம்பத், சுசீலா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE