காஞ்சிபுரம் : 'அ.தி.மு.க.,வுக்கு எப்போதும் வளர்பிறைதான் ' என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், கோகுல இந்திரா, பெஞ்சமின், காமராஜ் அகியோர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
தி.மு.க.,வினர் சொல்வது வெத்து வேட்டுதான். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சி செய்தது. மக்களிடம் கெட்ட பெயர் கிடையாது. அ.தி.மு.க.,வுக்கு எப்போதும் வளர்பிறைதான்.கூட்டம் அதிகமாக இருந்தால் ஓட்டு கிடைத்து விடும் என நினைக்க கூடாது. கட்சியினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். அப்போது வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலர் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE