3 கல்யாணம்; 2 கள்ளக்காதல்: கொலையில் முடிந்த கூடாநட்பு

Added : செப் 18, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சேலம் : கள்ளக்காதல் விவகாரத்தில், பெண்ணை சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை அவரது நண்பரே, கத்தியால் குத்தி கொலை செய்தார்.சேலம், அயோத்தியாப் பட்டணத்தைச் சேர்ந்த இளம்பெண் கலைமணி, 23; இவர் 2017ல் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். 2018ல் மற்றொருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். 2019ல், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த
 3 கல்யாணம்; 2 கள்ளக்காதல்: கொலையில் முடிந்த கூடாநட்பு

சேலம் : கள்ளக்காதல் விவகாரத்தில், பெண்ணை சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை அவரது நண்பரே, கத்தியால் குத்தி கொலை செய்தார்.

சேலம், அயோத்தியாப் பட்டணத்தைச் சேர்ந்த இளம்பெண் கலைமணி, 23; இவர் 2017ல் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். 2018ல் மற்றொருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். 2019ல், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன், 29; கலைமணியை திருமணம் செய்தார்.முருகேசனை விவாகரத்து செய்யாத நிலையில், அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி கிருபைராஜ், 23, என்பவருடன் கலைமணி நெருங்கி பழகினார்.



கிருபைராஜ், கலைமணியை பார்க்க செல்லும்போது அவரது நண்பர் கலையரசன், 23, என்பவரை அழைத்து சென்றார். கலைமணி, கலையரசனுடனும் நெருங்கி பழகினார்.கலைமணி ஆறு மாத கர்ப்பமானார். அவரை யார் திருமணம் செய்து கொள்வது என்பதில், கலையரசன், கிருபைராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று சேலம் கந்தாஸ்ரமம் மலைப் பகுதிக்கு கலைமணி, கிருபைராஜ் சென்றனர்.அப்போது, கலையரசனை தொடர்பு கொண்டு கிருபைராஜ் வரவழைத்தார்.



அவர் வந்ததும் கலைமணியை விட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்த கிருபைராஜ், கடைசியாக அவருடன் ஒருமுறை நெருக்கமாக இருந்தார்.அப்போது, அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலையரசன், கத்தியால் கிருபைராஜை குத்தினார். இதில், அவர் உயிரிழந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் கலையரசனை கைது செய்தனர். கலைமணியிடம் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-செப்-202105:45:56 IST Report Abuse
NicoleThomson என்ன கொடுமை சரவணா இது , சேலம் வரலாற்றில் முதன்முறையாக என்று அடிக்கடி ஒளிபரப்பு செய்யலாம் போல , கார்பொரேட் டிவிகலீல் வரும் சீரியல் போல அல்லவா இருக்கு
Rate this:
Cancel
kvv - Chennai,இந்தியா
21-செப்-202121:59:32 IST Report Abuse
kvv எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று ... அது எதோ? அது எதோ? :)
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-செப்-202111:34:32 IST Report Abuse
JeevaKiran எல்லாம் வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் உள்ளது.....ஒருவேளை படத்தை பார்த்து தான் இதுபோல் நடக்கிறதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X