சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுள்ளார். விரைவில் டில்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் ரவி. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார்.உளவுத் துறை உட்பட மத்திய அரசின் ரகசிய அமைப்புகளின் தலைவர்களிடமும் ரவி பேசுவார் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஓய்வு பெற்ற சீனியர் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் இவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஜேம்ஸ்பாண்ட் போல செயல்படுவாரா என சிலர் சந்தேகப்படுகின்றனர். இதெல்லாம் வீண் வதந்தி என்கின்றன டில்லி வட்டாரங்கள். 'எப்போதும் முதல்வருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார். ஆனாலும் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை கறாராக செய்து முடிக்கவும் தயங்க மாட்டார்' என, புதிய கவர்னர் பற்றி கூறப்படுகிறது.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் கவர்னரை சந்திக்கலாம் என்கின்றனர்.'ஆனால், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தேவையில்லாமல் எதற்கு அவரைப் பார்த்து பயப்படுகின்றன என தெரியவில்லை' என்கின்றனர் டில்லியில் உள்ள மூத்த அதிகாரிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE