புதுடில்லி: கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் பாஜ.,வினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் 2.5 கோடி பேருக்கு 24 மணி நேரத்தில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
இதனை பாஜ.,வைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை அடுத்து ராகுல் கடந்த 10 நாட்களாக கோவின் தளத்தில் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து பட்டியல் மற்றும் புள்ளி விவரம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி மட்டும் மக்களை கவர்வதற்காக அதிக அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகவும் மற்ற நாட்களில் அதிகமாக செலுத்தப்படவில்லை என்றும் அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

'வேக்ஸினேஷன்' என்கிற ஹேஷ்டேக்கில் பலர் ட்வீட் செய்து இருந்த நிலையில் ராகுலும் அதில் ட்வீட் செய்திருந்தார். 'பிறந்தநாள் விழா நிறைவடைந்தது' என்று கேப்ஷன் கொடுத்து நேற்றும், இன்றும் தடுப்பு மருந்து விநியோகம் கணிசமாக குறைந்து இருக்கும் புள்ளி விவரத்தை பகிர்ந்திருந்தார்.
Event ख़त्म! #Vaccination pic.twitter.com/S1SAdjGUA2
— Rahul Gandhi (@RahulGandhi) September 19, 2021