திருச்சி-நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவோம் என்பதை குறிக்கும் வகையில், கண்ணீர் அஞ்சலி 'போஸ்டர்' அடித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருச்சி, கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சின்ராஜ், 24, என்பவர் 15ம் தேதி, பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இரு ரவுடிகளின் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளது. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் உட்பட சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில், சின்ராஜ் கொலை செய்யப்பட்டதற்காக அச்சிடப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், கொலைக்கு பழிக்கு பழி வாங்குவோம் என்பதை குறிக்கும் வகையில், 'விரைவில்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.அதிர்ச்சி அடைந்த போலீசார், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தவர்கள் குறித்து விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட சின்ராஜ் நண்பர்கள் 20 - 26 வயதுள்ள ஐந்து பேர் என தெரிந்தது. அந்த ஐந்து பேரையும் நேற்று பொன்மலை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE