2024-ல் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல்: பழனிசாமி

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (28) | |
Advertisement
சேலம்: வரும் 2024-ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வரும் 2024-ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும்

சேலம்: வரும் 2024-ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news


சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வரும் 2024-ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது .


எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் எம்.எல்.ஏக்களின் எணணிக்கையும் அதிகரிக்கலாம். எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து அரசிடம் தெளிவான பதில் இல்லை. நீட் தேர்வு விலக்குக்காக அ.திமுக. கொண்டு வந்த தீர்மானத்தையே தி.மு.க.,வும் கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க., கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் தி.மு.க.,வும் அதையே பின்பற்றுகிறது.


latest tamil news




2024-ல் சட்டபை தேர்தல்?



தலைநகர் புதுடில்லியில் ஆயிரம் எம்.பிக்கள் அமரும் வகையில் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.அதே போல் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புஇருப்பதால் 2024-ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

22-செப்-202122:51:38 IST Report Abuse
பேசும் தமிழன் அப்போ. விடியல் அரசு பூனை மேல் மதில் போல்..... அதோ கதி தானா???
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
22-செப்-202122:29:48 IST Report Abuse
J. G. Muthuraj பார்லிமென்ட் கட்டடத்தில ஆயிரம் பேர் உட்காரலாமாம் அதினால MP எண்ணிக்கையை கூட்டுவாங்கலாம்.....அதை கூட்டுவதினால், சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையும் கூட்டப்படுமாம்.....இந்த ஒரு காரணத்தினாலே, இரு தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கவேண்டுமாம்.....அடுத்து, பார்லிமெண்ட்டுக்கு எந்த கட்சிக்கு ஒட்டு போடுவார்களா, அதே கட்சிக்குத்தான் சட்டசபை தேர்தலுக்கும் ஒட்டு போட வேண்டும், மக்களே என்று சொல்லாமல் சொல்கிறார் எதிர்க்கட்சி தலைவர்....பிஜேபியின் பின் கொசுவத்தை பிடித்துக்கொண்டே ஆட்சிபீடத்தில் அமரலாம் என்ற கற்பனை......ஜெயா அவர்கள் இறந்தபிறகு இவர் மாத்திரம் ஐந்து வருடம் முடியும்வரை ஆட்சியில் இருப்பேன் என்று அடம் பிடித்தார்......
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
22-செப்-202122:15:25 IST Report Abuse
Visu Iyer தேர்தல் தானே வந்தால் என்ன.. நல்லது தானே.. மறுபடியும் திமுகவே ஜெயிககும்... அதிமுகவிடம் இப்போ இருக்கிற அறுபதையும் திமுகவே அள்ளும் என்பதில் எள்ளவும் சந்தகம் இல்லையே... அப்படி தேர்தல் வந்தால் ஆபத்து அதிமுகவுக்கு தான்.. எதிர்கட்சி தலைவர் பதவி கூட பழனிச்சாமிக்கு கிடைக்காதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X