புதுடில்லி :கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில்
மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.கடந்த ஜூன் 30ல் அளித்த உத்தரவில், கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் வெளியிடும்படி, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுஇருந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனு:கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
இந்த இழப்பீட்டை, மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து மாநிலங்கள் வழங்கும்.மேலும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE