அன்னுார் : தோளோடு இணைந்த 'பாடி கேமரா'வுடன், போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3 க்கான தேர்தல், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது
.தி.மு.க., பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும், முதல் உள்ளாட்சித் தேர்தல் என்பதால், தி.மு.க., அ.தி.மு.க., இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, தேர்தல் பணிகள் நடக்கும், அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 'பாடி கேமரா' பொருத்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ள சமயத்தில்,
இந்த கேமராவை 'ஆன்' செய்து விடுவோம். இதில், அங்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி விடும். இதில், பதிவாகும் காட்சிகள், ரூரல் எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த 'பாடி கேமரா' வாயிலாக படம் பிடிக்கப்படுவதால், பிரச்னை செய்பவர்கள், இதைக் கண்டதும் தயங்குகின்றனர்.தற்போது ஒரு ஸ்டேஷனுக்கு, ஒரு 'பாடி கேமரா' மட்டுமே உள்ளது. கூடுதலாக நான்கு கேமராக்கள் வழங்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE