மதுரை:முதுகலை சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த தாக்கலான வழக்கில்மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் லாவண்யா தாக்கல் செய்த பொதுநல மனு:அரசு சட்டக் கல்லுாரிகளில் முதுகலை (எல்.எல்.எம்.,) சட்டப் படிப்பு உள்ளது. இதில் தனியார் சட்டக் கல்லுாரிகள், இதர மாநில பல்கலையில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவர்கள்தான் அதிகளவில் சேர முடிகிறது. தனியார், அரசு சட்டக் கல்லுாரிகளில் கல்வி, தேர்வு, மதிப்பெண் கணக்கிடும் முறையில் மாறுபாடுகள் உள்ளன.அரசு சட்டக் கல்லுாரிகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் முதலிடத்தில் தேர்ச்சி பெற முடிகிறது.
பல தொழிற்கல்வி உயர் படிப்புகளுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.முதுகலை சட்டப்படிப்பில் அரசு, தனியார் சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் 2021-22 கல்வியாண்டில் முதுகலை சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு லாவண்யா மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர்அமர்வு இந்திய பார் கவுன்சில் செயலாளர், மத்திய, மாநில சட்டத்துறை செயலாளர்கள், அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 8 வாரங்கள் ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE