பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஜெ., பேரவை மாவட்ட துணைச் செயலாளரை கத்தியால் குத்திய, மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர்.
பொள்ளாச்சி பழனிச்சாமிகவுண்டர் வீதியை சேர்ந்தவர், ராஜாமுகமது, 40. அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை மாவட்ட துணைச் செயலாளராக உள்ள இவர், சலுான் கடை நடத்துகிறார்.ராஜாமுகமதுக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான குருமூர்த்தி, நந்தகுமார் மற்றும் ஜலீல் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், சுந்தரம் டூரிஸ்ட் ேஹாம் அருகே, இவர்கள் பிரச்னை குறித்து பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி, ராஜாமுகமதுவின் கைகளை நந்தகுமார் பிடித்துக் கொள்ள, மற்ற இருவரும் சேர்ந்து, கத்தியால் குத்தி விட்டு, பைக்கில் தப்பினர். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான மூன்று பேரை தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE