சின்னாளபட்டி : சின்னாளபட்டி ரோட்டில் பரவியுள்ள மணல் குவியலால் இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.
சின்னாளபட்டியில் பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறைகளின் சார்பில் அவ்வப்போது மெயின் ரோடு, குறுகிய தெருக்களில் சீரமைப்பு பணி நடக்கிறது. பல பகுதிகள் பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற புகார் நீடிக்கிறது.இச்சூழலில், மெயின் ரோட்டின் சீரமைத்த பகுதிகளில் ரோட்டோர மணல் குவியல்கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன.
பஸ் ஸ்டாண்ட் - பூஞ்சோலை ரோடு, மேல்நிலைப்பள்ளி ரோடு, செக்காபட்டி - மேட்டுப்பட்டி ரோடு போன்ற பகுதிகளில் ரோட்டின் நடுப்பகுதி வரை மணல் பரவிக் கிடக்கிறது. கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.காற்றில் கிளம்பும் புழுதியால் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் பாதிப்படைகின்றனர். சாலையில் குவியும் மணலை அகற்றி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE