மதுக்கரை;மதுக்கரை பேரூராட்சி கோவை -- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், காந்தி நகர் பகுதியில் ரோட்டின் இடதுபுறம், நான்கு இடங்களில் குப்பை கழிவுகள் இரவு நேரத்தில் கொட்டப்பட்டுள்ளன. இவ்விடங்களை கடக்கும்போது, துர்நாற்றம் வீசுகிறது.பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள், மரப்பாலம் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள கழிவு சேகரிப்பு மையத்தில் கொட்டப்படுகிறது. நெடுஞ்சாலையில் கொட்டியது யார் என்பது புதிராக உள்ளது.கடந்த ஒரு வார காலத்தில், காந்தி நகர், மரப்பாலம். குவாரி ஆபீஸ், மேட்டாங்காடு மேல்நிலை குடிநீர் தொட்டி, தனலட்சுமி திருமண மண்டபம் உள்பட, 10 இடங்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு குப்பைத்தொட்டிகள் மாயமாகியுள்ளன.இப்பகுதிகளில் வசிப்போர், குப்பைக்கழிவுகளை கொட்ட வழியின்றி சிரமப்படுகின்றனர். பேருராட்சி துப்புரவு பணியாளர்கள் வரும்வரை காத்திருந்து, குப்பை வழங்க வேண்டியதுள்ளது.சிலர் தங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில், வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை தேடிச்சென்று கொட்டுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, குப்பை தொட்டிகள் மாயமாவதை தடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE