திருப்பூர்-சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில், பல ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக அறுவடை துவங்கி வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இடைத்தரகர்களும், வியாபாரிகளும், கிலோ 8 ரூபாய்க்கு மட்டும் கொள்முதல் செய்வதால், கடும் நஷ்டம் ஏற்படுவதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏக்கருக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயத்துக்கு, கிலோ 40 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும். விலை வீழ்ச்சி காலத்தில், ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மூட்டைகளில் எடுத்து வந்த வெங்காயத்தை தரையில் கொட்டி கோஷமிட்ட விவசாயிகள், கலெக்டர் வினீத்திடம் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE