புதுடில்லி:கடந்த 2015ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பிடித்த தன் மூத்த சகோதரியின் வழியை பின்பற்றி, தங்கையும், தற்போது தேர்வில் 15வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளை நிரப்ப, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்தி வருகிறது.கடந்த ஆண்டிற்கான இறுதிக்கட்ட நேர்முக தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில், 761 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அகில இந்திய அளவில் 15வதுஇடத்தை பிடித்து தேர்ச்சி பெற்ற ரியா தாபி என்ற மாணவி, டில்லி லேடி ஸ்ரீ ராம் கல்லுாரியில் பட்டம் பெற்றவர்.இவரின் மூத்த சகோதரியான டினா தாபி, 2015ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், முதலிடம் பிடித்தவர். யு.பி.எஸ்.சி., தேர்வில் முதலிடம் பிடித்த முதல் தலித் பெண் என்ற பெருமைக்குரிய டினா, ராஜஸ்தான் மாநில நிதித் துறையின் இணை செயலராக பணிபுரிந்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE