'நீட்' தேர்வு முறையில் மாற்றம் : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
'நீட்' தேர்வு முறையில் மாற்றம் : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

'நீட்' தேர்வு முறையில் மாற்றம் : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி-'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு முறை திடீரென மாற்றப்பட்டுள்ளதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நவ., 13, 14ல் நடக்க உள்ளது. தேர்வு முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதுவரை நுழைவுத்

புதுடில்லி-'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு முறை திடீரென மாற்றப்பட்டுள்ளதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.



latest tamil news

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நவ., 13, 14ல் நடக்க உள்ளது. தேர்வு முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதுவரை நுழைவுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் உயர் சிறப்பு பாட திட்டம் தொடர்பான கேள்விகளுக்கும், 40 சதவீத மதிப்பெண்கள் பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் வழங்கப்படுகின்றன. இதை மாற்றி, இனி 100 சதவீத மதிப்பெண்களும் பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கே வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதை எதிர்த்து முதுகலை டாக்டர்கள் சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இதை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பி.வி. நாகரத்னா அமர்வு உத்தரவிட்டதாவது: நீட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 23ல் வெளியிடப்பட்டது. நவ., 13 மற்றும் 14ல் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முறையை மாற்றி, ஆக., 31ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திடீரென இவ்வாறு மாற்றி அமைத்தது ஏன்; இதற்கான உரிய காரணத்தை தெரிவிக்காவிட்டால் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிப்போம்.


latest tamil news

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் ஆகியவை தங்கள் செயல்பாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நினைத்த நேரத்தில் இவ்வாறு மாற்றலாமா? சரியாக சிந்திக்காக சில அதிகாரிகளால் இளம் மருத்துவர்கள் கால்பந்து போல் உதைபட வேண்டுமா. உடனடியாக மூன்று அமைப்புகளும் சந்தித்து, பிரச்னைக்கு சரியான தீர்வு காண வேண்டும். பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் தரப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

Vena Suna - Coimbatore,இந்தியா
28-செப்-202119:42:59 IST Report Abuse
Vena Suna ,தேர்வை எளிமையாக்கி உள்ளனர்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202109:30:51 IST Report Abuse
duruvasar நீட்டே தேவையில்லாத ஆணி என கட்டமைக்க ஒரு ராமசாமி, அப்புசாமி போன்றோர்கள்தான் நீதியின் காப்பாளர்கள் என போற்றப்படுவது இங்குதான்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-செப்-202108:41:26 IST Report Abuse
GMM தேர்வு அறிவிப்பு 23/07-மாற்றம் அறிவிப்பு 31/09- தேர்வு 13, 14/11. (உயர் சிறப்பு பாடம் 60 சதவீதம். பொது மருத்துவ பாடம் 40 சதவீதம். ) மாற்றத்தில் 100 சதவிகிதம் பொது மருத்துவம் பாடம். இதில் நீதிமன்றம் அவசரப்பட்டு, கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை? தேர்வு மாற்றத்திற்கு பின் சுமார் 1.5 மாதம் காலம் இடைவெளி உண்டு. சில மாணவர்கள் மட்டும் எதிர்த்து வழக்கு. பல மாணவர்கள் கருத்து என்ன? தேர்வு மாற்றம் காரணம் தெரியவில்லை. (உயர் சிறப்பு பாட கேள்வி தாள் கசிந்து / கடினமாக இருக்கலாம். பொது மருத்துவ பாடம் 100 சதவீதம் கேள்வி மட்டும் என்பது நல்லது தானே.) மருத்துவராக பணிபுரியும் போது யாரும் மருத்துவ நூல்களை (books) உடன் வைத்து கொள்வது இல்லை. பல மருந்து பெயர் , சோதனை பெயர்கள் மனதில் வைத்து சிகிச்சை தருகின்றனர். தேர்வு முறையில் மாற்றம் மாணவர்களை பாதிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X