ஆட்சி மாறினால் காட்சி மாறும்;  போலீஸ் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ஆட்சி மாறினால் காட்சி மாறும்; போலீஸ் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

ஆட்சி மாறினால் காட்சி மாறும்; போலீஸ் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி-'அரசு ஆதரவு இருக்கும் வரை தான் சட்டவிரோதமாக செயல்பட முடியும். ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும். இது போன்ற போலீஸ் அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்' என, சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான குர்ஜிந்தர் பால் சிங்

புதுடில்லி-'அரசு ஆதரவு இருக்கும் வரை தான் சட்டவிரோதமாக செயல்பட முடியும். ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும். இது போன்ற போலீஸ் அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும்' என, சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.



latest tamil news

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான குர்ஜிந்தர் பால் சிங் மீது, பணம் கேட்டு மிரட்டியது உட்பட ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இந்த வழக்கில் கைது செய்வதற்கு தடை கோரி, அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதாவது:மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். அவர்களது ஆதரவு இருக்கும்போது, இந்த அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.ஆட்சி மாறினால், முதலுடன் வட்டியையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கும். புதிய ஆட்சியாளர்களால் பல வழக்குகள் தொடரப்படுகின்றன.


latest tamil news

ஏற்கனவே இரண்டு வழக்குகளில் கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இருப்பினும், இந்த வழக்கிலும் கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (12)

28-செப்-202112:11:58 IST Report Abuse
உண்மை நல்ல உத்தரவு.மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் காவல்துறையினர் அரசியல் சார்ந்து பணியாற்றாமல் இருக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து மத்திய அரசுக்கு ஆலோசனை அறிக்கை அளித்தால் சட்ட முன்வடிவுக்கு நன்றாக இருக்கும் என்று ஒரு சராசரி குடிமகனாக கருத்து.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
28-செப்-202110:45:11 IST Report Abuse
Anand //இது போன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது// தலை சுத்துதுடா சாமி.....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202108:57:31 IST Report Abuse
duruvasar இது மாநில உரிமையை பறிக்கும் செயல். உதயண்ணா திருவாரூரில் இதைத்தானே கூறினார். திமுக கார்ன் மேல் கைவச்சா என்ன நடக்குமுன்னு பரிஞ்சிக்குங்கன்னு கனியக்கா கூட ஒரு தோழமை சுடல் செஞ்சாங்க. எனவே அவங்க பணியை செய்யவுடுங்க நீதியரசர்களே. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ஆளும் கட்சி ஆட்கள் தங்கள் பணியை செய்ய தனி இருக்கைகள் போடவேண்டும் என்று உத்தரவையும் போடவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்பாய் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X