இந்தியர்களை அனுமதிக்காதது ஏன்? ; மத்திய அரசின் கேள்விக்கு சீனா பதில்!
இந்தியர்களை அனுமதிக்காதது ஏன்? ; மத்திய அரசின் கேள்விக்கு சீனா பதில்!

இந்தியர்களை அனுமதிக்காதது ஏன்? ; மத்திய அரசின் கேள்விக்கு சீனா பதில்!

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
பீஜிங்-'கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். இது வெளிநாடுகளில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும்' என, சீன அரசு கூறியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், அங்கு படித்து வந்த மற்றும் பணியாற்றி வந்த இந்தியர்கள் நாடு திரும்பினர். தற்போது கொரோனா பரவல்

பீஜிங்-'கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். இது வெளிநாடுகளில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும்' என, சீன அரசு கூறியுள்ளது.




latest tamil news

நம் அண்டை நாடான சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதும், அங்கு படித்து வந்த மற்றும் பணியாற்றி வந்த இந்தியர்கள் நாடு திரும்பினர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், மீண்டும் அவர்கள் சீனாவுக்கு திரும்புவதற்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது. மேலும், வெளிநாட்டு விமானங்கள் வருகைக்கும் தடை விதித்துள்ளது.இதனால் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர், தொழிலாளர் என, 21 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள், சீனாவுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.



சமீபத்தில் நடந்த இந்தியா - சீனா உறவுகள் தொடர்பான பேச்சின்போது விசா வழங்க மறுக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியத் துாதர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார்.இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனாவில் அறிவியல்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயமாக தனிமைபடுத்தப்படுவர். மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.



latest tamil news

இதன்படியே இந்தியாவில் இருந்து வருவோருக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எதிரானதல்ல. வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள சீனர்களுக்கும் இது பொருந்தும். அந்தந்த நாடுகளுடன் பேசி, கட்டுப்பாடுகளை விலக்கி கொள்வது குறித்து தகுந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (11)

S.Baliah Seer - Chennai,இந்தியா
28-செப்-202112:19:14 IST Report Abuse
S.Baliah Seer PLEASE AVOID MULTIPLE ENTRY OF THE SAME COMMENT
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
28-செப்-202111:18:49 IST Report Abuse
suresh kumar //வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள சீனர்களுக்கும் இது பொருந்தும்...// ஆனால் கனடாவிலிருந்து ஹுவாவேயின் பெண் அதிகாரியை தனி விமானம் மூலம் பிரம்மாண்டமாக வரவேற்றது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202108:44:33 IST Report Abuse
duruvasar இப்போது சீனாவில் அணில் தொல்லைகள் அதிகரித்து வருவதை மறைக்கவே இந்த நடவடிக்கை என ஒருசாரார் கருதுகின்றனர். சீனா- காங்கிரஸ் ஒப்பந்தப்படி நேரு குடும்பம் ( தென்நாட்டு நேரு அல்ல) சீனா சென்றுவர எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் அழகிரி கண்களில் ஆனந்த கண்ணீர் கொட்டும். செயல்பாபுவுக்கு செய்தது போல் ஸ்டாலின் அய்யா அதை துடைக்க முயலவேண்டாம். கொட்டவிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X