பாலக்காடு : வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்தார்.
கோவை - பாலக்காடு எல்லையில் வாளையார் விற்பனை வரி சோதனை சாவடியை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், சோதனை சாவடிகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. சரியான வரி கட்டினாலே வரி வருவாய் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி.,க்கு முன்னால் ஒவ்வொரு ஆண்டும் 14 முதல் 16 சதவீதம் வரை வரி வருவாய் அதிகரித்தது.ஆனால் ஜி.எஸ்.டி., அமல்படுத்தி நான்காண்டு கடந்தும் வருவாயில் எந்தவித உயர்வும் இல்லை.
கேரளாவில் இருந்து வெளியே செல்லும் சரக்குகளை கண்காணிக்க கேமரா பொருத்தப்படும். வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரி வருவாயை உயர்த்த தணிக்கை நுண்ணறிவு அமைப்பை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE